---Advertisement---

ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

On: February 13, 2026 10:27 AM
Follow Us:
---Advertisement---

சிலம்புச் செல்வம் ம.பொ.சியின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ம.பொ.சி. அவர்களின் சிலைக்கு இன்று (ஜூன் 26) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்தநிலையில், இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ம.பொ.சி என்று அன்போடு அழைக்கப்படும், திரு. மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் ஐயா அவர்களின் 119வது பிறந்த நாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

நம்முடைய சென்னை மாநகரம் ஆந்திராவுடன் இணைக்கப்படுவதை தடுத்து தமிழ்நாட்டுடன் இணைவதற்கும், கன்னியாகுமரி, பாளையங்கோட்டை போன்ற பகுதிகள் கேரளாவுடன் இணையாமல் தடுக்கப்பட்டதற்கும்,  ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி அவர்களின் போராட்டம் முக்கிய காரணமாகும்.

இன்றைய நாளில், அவரது புகழை போற்றி வணங்குவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் மனதை வென்ற பிரதமர் மோடி: நயினார் நாகேந்திரன்

ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை

மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்

ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்

ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

வீடுகள் தோறும் தேசியக்கொடி; திருச்சியில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம்

Leave a Comment