தேனி ஆண்டிப்பட்டியில் அரசு பள்ளியில் மாணவர்களை வைத்து கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த பள்ளி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். ஆண்டிப்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த அவலம் நடத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால், இவற்றைத்
தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசு பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்துவருகின்றன. தமிழகத்தில் பல தலைவர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அரசு பள்ளிகளில் படித்து முன்னேறியவர்கள் என்பதை திமுக அரசு ஞாபகத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த
விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்திருந்தார். பள்ளி சீருடையிலேயே மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதும், அதை பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வை செய்து குப்பைகளை கூட்டும் போட்டோக்களும் வெளியானது. அரசு பள்ளிகளுக்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டிருக்கும் போதும், படிக்கவரும் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் நேற்று (1:02:2023) பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்L னர். கடந்த ஆண்டு பள்ளி கல்வி துறை பள்ளிகளில் ஆய்வு செய்த போது அங்குள்ள மரங்களில் இருந்து விழும் இலைகளை சுத்தப்படுத்த மாணவர்களை பயன்படுத்தகூடாது என்றும், வெளி ஆட்கள் அல்லது தூய்மை பணியாளரை நியமிக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை சார்பில் அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் இதுவரை மாவட்ட கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் எவ்வித ஆய்வும் நடத்த வில்லை. இந்த நிலையில் சுத்தம் செய்ய வைத்த பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கவனம் இது போன்ற சிறிய அரசு பள்ளிகளின் மீது இருக்குமா! என கேள்வி எழுப்பி வருகின்றனர் பெற்றோர். இரண்டாண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் உள்ள சாப்டர் பள்ளி என்னும் கிறித்தவ பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த பின் அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள் ஓரளவு மேற்பார்வை செய்து வந்தனர். அதன் பின் மேற்பார்வை சரிவர செய்ய பட வில்லை திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிகளில் மாவட்ட அலுவலர்கள் ஆய்வு செய்யாமல் அமைச்சரின் பின் செல்லும் வழக்கமும், கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சின்னவர் எனப்படும் உதயநிதி எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அந்த மாவட்டத்திற்கு அவரின் பின் செல்லும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் அரசு வேலை செய்வதை காட்டிலும், அரசியல் வாதிகளுக்காக வேலை செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.