
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கருத்துகணிப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறார். இதை தொடர்நது தற்போது நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உலகில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் பட்டியலில் 78% பேரின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
உலகின் உள்ள முன்னணி கருத்து கணிப்பு ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம், அமெரிக்காவில் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் ஜன. 26 முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்தந்த நாட்டு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலில் ‘மார்னிங் கன்சல்ட்’ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 78 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டுமே எதிர் வாக்கினை பதிவு செய்துள்ளனர். 4 சதவீதம் பேர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை, எனக் கருத்துகணிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 68 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து 28 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். சுவிட்சர்லாந்து அதிபர் ஆலைன் பெர்செட் 62 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பேன்ஸ் 58 சதவீத வாக்குகளைப் பெற்று 4-வது இடத்திலும். பிரேசில் அதிபராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கபட்ட லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 5-வது இடத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவருக்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் அவர் 7-வது இடத்தில் உள்ளார்.
பெரும்பாலான தலைவர்களுக்கு அவர்களது நாடுகளில் மக்கள் ஆதரவு குறைவாகவே உள்ளது, என்றாலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத தலைவராக மோடி உருவெடுத்து வருகிறார். சமீபத்தில் இந்திய டுடே சார்பில் எடுக்கப்பட்ட “மூட் ஆப் தி நேஷன்” என்ற கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது