கடந்த 23.08.2023 புதன் கிழமை மாலை மாம்பலம் பாணிக்ரஹா திருமண மண்டபத்தில் திரு முகிலன் கிருஷ்ணமூர்த்தி அவர்களது மகள் டாக்டர். முகில் மதி – பிரவீன் குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அன்று மாலை மிகச் சரியாக ஆறு மணி நான்கு நிமிடத்திற்கு சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதைத் தொடர்ந்து தம்பதியர் மண்டபத்திற்கு வெளியில் வந்து தேசியக் கொடியை ஏந்தியபடி பாரத் மாதா கி ஜெய் என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து 5000 வாலா சரவெடி வெடிக்கப்பட்டது.
![](https://oreynadu.in/wp-content/uploads/2023/09/2-ch-win-ma.jpg)
சந்திரயான் வெற்றியை மணமக்கள் கோலாகலமாகக் கொண்டாடியதை அப்பகுதி மக்கள் வெகுவாக ரசித்தனர்.