---Advertisement---

பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

On: February 13, 2026 10:25 AM
Follow Us:
---Advertisement---

பாரதிய ஜனதா கட்சியின் 45வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மகளிர் அணி தலைவர் சங்கீதா தலைமையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நேற்று (ஏப்ரல் 08) பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கீதா தலைமையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். மேலும் மருத்துவமனையின் கழிவறைகளை சுத்தம் செய்தனர்.

அதோடு மட்டுமின்றி பாலக்கோடு நகரில் அருகாமையில் உள்ள ஏரியில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதையும் அகற்றினர். இந்த பணியில் பாலக்கோடு நகர மகளிர் அணி தலைவர் வித்யா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் நகரத் தலைவர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் ஆனந்தன், பிரேமா, சிவசக்தி, கவிதா, கிரி, அழகு பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மருத்துவமனையில் தூய்மைப்பணி மேற்கொண்ட பாஜகவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்

பாஜக சேவை இருவாரங்கள் மாநில பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன்

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் சாலை அமைக்காமல் காசோலையை சுருட்டிய திமுக அரசு : நயினார் நாகேந்திரன் கண்டனம்

Leave a Comment